புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் ஆன்லைன் மூலம் கேரளா லாட்டரி விற்பனை செய்த தந்தை,மகன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை மூகாம்பிகை நகரில் முருகன் கோவில் அருகே ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் லேப்டாப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்ததை கண்டனர். உடனே போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நாவற்குளம் குளத்துமேட்டு தெருவை சேர்ந்த பாஸ்கர் என்ற ஆறுமுகம்(49), இவரது மகன் ஈஸ்வர் (20), லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் மெயின் ரோட்டை சேர்ந்த மதிவாணன்(34) மற்றும் அரிபிரசாந்த்(27) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.24 ஆயிரம் மற்றும் செல்போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.