புதுச்சேரியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது
புதுச்சேரி ஏம்பளம் பகுதியை சேர்ந்தவர் தேவா (26). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. செல்போன் டவர் மெக்கானிகான இவரது வீட்டில் கடந்த ஒரு மாதகாலமாக குடும்ப சொத்துக்களை பிரிப்பது சம்பந்தமான பிரச்சினை நடைபெற்று வருவதாகவும், இதற்கான சட்ட பணிகளை பெண் வழக்கறிஞர் ஒருவர் செய்து வருவதும், அவர் தேவாவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த தேவா நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகே இருந்த செல்போன் டவர் மீது ஏறி கொண்டு, தன்னை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய பெண் வழக்கறிஞர் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் தாம் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.
இதனால் அங்கு ஒன்று கூடிய ஊர் மக்கள், தேவாவை டவரில் இருந்து கீழே இறங்க சொல்லியும் அவர் இறங்கவில்லை. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இது குறித்து மங்களம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தேவாவிடம் கீழே வந்தால் தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் என லாவகமாக பேசி, அவரை செல்போன் டவரில் இருந்து கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
நள்ளிரவில் குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.