புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பிரபல ரவுடிகளின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஆப்ரேஷன் விடியல் என்ற பெயரில் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள முக்கிய ரவுடிகளின் வீடுகளில் இன்று காலை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது ரவுடுகளின் வீடுகளில் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் ஏதாவது பதுக்க வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். மேலும், தற்போது அவர்கள் குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனரா..? அல்லது குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்களா..? என விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் சோதனையின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரவுடிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் போலீசார் அறிவுறுத்தினர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.