சேலம் ; 3 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் வெள்ளத்தில் காட்சியளித்த விளாத்திகுளம் வைப்பாறுவில் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து குதூகல கொண்டாடினர்.
விடுமுறையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில், ஆண்டுதோறும் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு தங்களது குடும்பங்களுடன் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வாறு செல்லும் போது வீட்டில் சமைத்த உணவுகள், திண்பண்டங்கள், கரும்பு பணங்கிழங்கு உள்ளிட்டவற்றை ஆற்றுக்குக் கொண்டு வந்து அங்கு சந்திக்கும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அவற்றை கொடுத்து, தங்களது அன்பை பரிமாறிக்கொண்டு, அவர்களுடன் சேர்ந்து விளையாடி ஆண்டுக்கொருமுறை இதுபோன்று மகிழ்ச்சியாக பொங்கல் விடுமுறையை கழித்து வருகின்றனர்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் இந்த வைப்பாற்றில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால், 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு இன்று வைப்பாற்றுக்கு உற்சாகம் பொங்க மகிழ்ச்சியாக தங்களது குடும்பத்துடன் வந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
இதனால், விளாத்திகுளம் வைப்பாறானது மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.