உதகை தாவரவியல் பூங்காவில் களைகட்டிய காணும் பொங்கல் விழாவில் நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசையுடன் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர்.
உதகை தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
இதை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சி நீலகிரி மலையில் வாழக்கூடிய தோடர், படுகர் மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் இசைக்கு நடனமாடினர்.
அப்போது, சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் மலைவாழ் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உறியடி போட்டியில் அமைச்சர் கா .ராமச்சந்திரன் உட்பட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்து மகிழ்ந்தனர்.
உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் காணும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.