உதகை தாவரவியல் பூங்காவில் களைகட்டிய காணும் பொங்கல் விழாவில் நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசையுடன் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர்.
உதகை தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.
இதை தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சி நீலகிரி மலையில் வாழக்கூடிய தோடர், படுகர் மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் இசைக்கு நடனமாடினர்.
அப்போது, சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் மலைவாழ் மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற உறியடி போட்டியில் அமைச்சர் கா .ராமச்சந்திரன் உட்பட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உறியடித்து மகிழ்ந்தனர்.
உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் காணும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.