வேலூர் : வேலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவரின் கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் செய்த செயல் பேசு பொருளாகி வருகிறது.
பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக அரிசி பெரும் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்க உத்தரவிட்ட நிலையில், இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் நான்கு லட்சத்து 49 ஆயிரத்து 584 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்டத்திலுள்ள 485 முழு நேர மற்றும் 221 பகுதி நேர ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 706 ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதனை தொரப்பாடி பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மூதாட்டி ஒருவர் தனது ரேஷன் அட்டையை தனது மகன் எடுத்து வைத்திருப்பதாகவும், எனக்கு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மூதாட்டிக்கு பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மூதாட்டியின் கோரிக்கையை பொறுமையாக கேட்டு, அதற்கு தீர்வு காண அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
This website uses cookies.