பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதன்வழி, சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்படும் நடவடிக்கை நாளை (ஜனவரி 3) தொடங்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்க: திமுக அரசு நடந்து கொள்ளும் விதம் சரியில்லை.. கூட்டணியில் உள்ள காங்., எம்பி எதிர்ப்பு!
இது தொடர்பாக, அனைத்து மாவட்டங்களிலும் டோக்கன் அச்சடிப்பது முடிந்து விட்டது. நாளை முதல், ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாக டோக்கன்களை வழங்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இதற்கிடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்கக் கோரி பாஜகவின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
This website uses cookies.