இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. தற்போது முதல் பாகம் வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது. வரும் செப்டம்பர் 30-ம் தேதி படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றனர். எழுத்தாளர் ஜெயமோகனும் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஹிந்தியில் அமிதாப்பச்சனும், தமிழில் சூர்யாவும், தெலுங்கில் மகேஷ்பாபுவும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் டிஜிட்டல் முறையில் டீசரை வெளியிடுகின்றனர்.
மேலும் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6:00 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெறுகிறது. அதில் படக் குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் டீசர் பரிசோதிக்கும் போது யாரோ வீடியோவாக எடுத்து லீக் செய்துள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.