விழுப்புரம் : பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சாமியார் ஒருவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி சூனியம் வைப்பது போன்று பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த அரசாலபுரம் கிராமத்தை சார்ந்த பூசாரியான ரகுராமன் அப்பகுதியில் உள்ள மலையில் உள்ள பாறைகளை அப்பகுதியை சார்ந்தவர்கள் உரிமம் பெறாமல் உடைத்து வருவது தொடர்பாக கூறி பலமுறை புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததாலும் இது தொடர்பாக புகார் அளித்தால் கொன்றுவிடுவேன் என தொலைபேசியில் சிலர் தொடர்பு கொண்டு மிரட்டுவதாக கூறியும், பாறைகளை வெட்டி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அவ்வாறு ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென பூசனிக்காய்க்கு மஞ்சள், விபூதி, சிகப்பினை தூவி சூனியம் வைப்பது போன்று பூஜை செய்தார்.
இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாமியாரை அப்புறப்படுத்த அவரிடமிருந்த மனுவை பெற்று கொண்டு அனுப்பி வைத்தனர்.
திடீரென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பில்லி சூனியம் வைப்பது போன்று பூஜையில் ஈடுபட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.