தமிழகம்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்.. நிரம்பிய பூண்டி ஏரி.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் பெய்து வரும் மழையால் பூண்டி ஏரி நிரம்பியதால் கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று இரவு முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், வேளச்சேரி 100 அடி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான், ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) மற்றும் தற்போது பெய்துவரும் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதில், ஏற்கனவே கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் கிருஷ்ணா நதி நீர், விநாடிக்கு 300 கன அடி என்ற வீதத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: இரவிலே நடந்த இரண்டு சம்பவங்கள்.. ‘சந்திரபாபு நாயுடு இதனை விவாதிக்க வேண்டும்’.. ஆந்திராவில் அதிர்ச்சி!

இவ்வாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக விநாடிக்கு 990 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடியில் 2 ஆயிரத்து 839 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், மொத்த உயரமான 35 அடியில் 34.05 அடி நீர் மட்டம் உள்ளது.

இந்த நிலையில், பூண்டி ஏரி 88 சதவீதம் நிரம்பி உள்ளது. இதனால் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் நீர்வள ஆதாரத் துறையினர், இன்று (டிச.12) பிற்பகல் 1.30 மணியளவிில், வினாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டு உள்ளனர்.

இவ்வாறு உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளதாகல், கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர் வள ஆதாரத் துறையினர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை ஏற்கனவே விடுத்துள்ளனர். தற்போதும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

10 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

11 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

14 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

15 hours ago

This website uses cookies.