மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என கோவை மாவட்ட பாஜக தலைவர் எச்சரித்துள்ளார்.
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டிய பொழுது 10 நாட்களுக்குள் கோவை மாநகரில் உள்ள அனைத்து போஸ்டர்களும் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
ஆனால், திமுகவினர் மட்டும் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வந்ததாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம் எனவும் கூறினார். மேலும் உயர் நீதிமன்ற ஆணையை கொண்டு கோவிலை மட்டும் இடிக்கக்கூடிய இந்த அரசு ஏன் இந்த போஸ்டர் விவகாரத்தில் அதனை பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
நேற்று பாஜக சார்பில் சுதந்திர தின விழா குறித்து போஸ்டர் ஒட்டச் சென்றபோது திமுகவினர் அராஜகமாக நடந்து கொண்டதாகவும் அவர்கள் மீது தேசியக்கொடி அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என பீளமேடு காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இன்று இரவிற்குள் மாவட்ட நிர்வாகம் அனைத்து போஸ்டர்களையும் அகற்றவில்லை என்றால் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து போஸ்டர்களையும் இன்று இரவு அகற்றுவோம் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாளை மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.