தமிழகம்

கர்ப்பிணினு சொல்லியும் விடல.. பாதிக்கப்பட்ட பெண் வேதனை பேட்டி!

கர்ப்பிணி எனக் கூறியும் விடாமல் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

வேலூர்: இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ரயிலின் மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட அவன், என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டான். நானும் அவனிடம் அரை மணி நேரமாகப் போராடினேன். கர்ப்பிணியாக இருப்பதால் விட்டுவிடுமாறும் கொஞ்சினேன்.

பின்னர் கத்திக் கூச்சலிட்டதால், என் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, கையை உடைத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். ரயிலில் இருந்து விழுந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே கையில் ரயிலைப் பிடித்துக் கொண்டு போராடினேன். ஆனால், என் கையை எட்டி உதைத்து, கீழே தள்ளிவிட்டான்.

பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. எனவே, குற்றவாளிக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மகளிர் பெட்டியில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுபோன்று வேறு யாருக்கும் எதுவும் நடக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.06) தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக, கோயம்புத்தூர் – திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்துள்ளார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் ரிலீஸ்.. திமுகவில் இதுவே தகுதி.. அண்ணாமலை திடீர் பதிவு!

அப்போது, அவர் ரயில் கழிவறைக்குச் சென்றபோது, ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில், கர்ப்பிணி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், வேலூர், மாவட்டம் கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது, ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். தொடர்ந்து, அவர் காட்பாடி ரயில் நிலையம் வந்ததும் இறங்கி தப்பியுள்ளார். இவர் அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…

45 minutes ago

நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!

"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…

49 minutes ago

என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…

2 hours ago

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

3 hours ago

என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…

4 hours ago

மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

4 hours ago

This website uses cookies.