தமிழகம்

தமிழ்நாடு ஒரு கொலைநாடு – பிரேமலதாவின் திடீர் காட்டத்திற்கு காரணம் என்ன?

தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்றம் அருகே பிரபல வழக்கறிஞர் சத்தியநாராயணனிடம் ஜூனியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளி அருகில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பட்டப்பகலில் மக்கள் பெருவாரியாகச் சூழ்ந்து இருக்கிற அந்தப் பகுதியில் வழக்கறிஞரை நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்தது கண்டனத்திற்குரியது. என்ன காரணத்துக்காகப் படுகொலை நடந்தது என்ற உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமை.

படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது அனைவரின் ஈரக்குலையும் நடுங்கும் அளவு படுபாதகமான ஒரு படுகொலை தமிழ்நாட்டில் ஓசூரில் நடந்திருக்கிறது. மேலும் பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியருக்குப் பாதுகாப்பு இல்லை, படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை,.

மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மேலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை, அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத முதலமைச்சர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கு 200 வெல்வோம் என்று சொல்வது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது” எனத் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்.. பட்டியலிட்ட இபிஎஸ்!

முன்னதாக, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளார் வெட்டிய நபர் நீதிமன்றத்தில் சரணடைய, இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சரண் அடைந்தவரின் மனைவியையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் ஓய்வறையில் இருந்த ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. திருமணத்திற்கு மறுத்ததால் குத்திக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்து உள்ளார். இது ஒரே நாளில் தமிழகத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் ஆகும்.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

4 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

7 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.