தமிழகம்

தமிழ்நாடு ஒரு கொலைநாடு – பிரேமலதாவின் திடீர் காட்டத்திற்கு காரணம் என்ன?

தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்றம் அருகே பிரபல வழக்கறிஞர் சத்தியநாராயணனிடம் ஜூனியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளி அருகில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பட்டப்பகலில் மக்கள் பெருவாரியாகச் சூழ்ந்து இருக்கிற அந்தப் பகுதியில் வழக்கறிஞரை நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்தது கண்டனத்திற்குரியது. என்ன காரணத்துக்காகப் படுகொலை நடந்தது என்ற உண்மை நிலவரத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமை.

படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது அனைவரின் ஈரக்குலையும் நடுங்கும் அளவு படுபாதகமான ஒரு படுகொலை தமிழ்நாட்டில் ஓசூரில் நடந்திருக்கிறது. மேலும் பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியருக்குப் பாதுகாப்பு இல்லை, படிக்கச் செல்லும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை,.

மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மேலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை, அரசு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத முதலமைச்சர், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கு 200 வெல்வோம் என்று சொல்வது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? தமிழகமா? இல்லை போதை தமிழகமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சுறுத்தலையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது” எனத் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்.. பட்டியலிட்ட இபிஎஸ்!

முன்னதாக, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளார் வெட்டிய நபர் நீதிமன்றத்தில் சரணடைய, இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக சரண் அடைந்தவரின் மனைவியையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் ஓய்வறையில் இருந்த ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியது. திருமணத்திற்கு மறுத்ததால் குத்திக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்து உள்ளார். இது ஒரே நாளில் தமிழகத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் ஆகும்.

Hariharasudhan R

Recent Posts

2 முறை கருக்கலைப்பு.. திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண் : நடுக்காட்டில் பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…

16 minutes ago

எங்க பாட்டுதானே ஜெயிக்க வைக்குது; காசு கொடுத்தா என்ன? – கண்டபடி கேட்ட கங்கை அமரன்

5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…

1 hour ago

திமுக அலுவலகத்தில் மேல் தளத்தில் ரெய்டு.. கீழ் தளத்தில் பேக்கரி டீலிங் ; இபிஎஸ் பதிலடி!

இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…

2 hours ago

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

3 hours ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

3 hours ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

4 hours ago

This website uses cookies.