தமிழகம்

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அரசியல் கட்சிகள் வியூக வகுப்பாளர்களை நியமனம் செய்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தேர்தல் வியூக வகுப்பாளர்களை நியமிப்பது ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு.

ஆலோசகரை வைப்பதால் வெற்றி பெறும் என்றால், அந்த ஆலோசகரே போட்டியிட்ட மாநிலத்தில் ஜெயித்தாரா என்பது கேள்விதான். கேப்டன் விஜயகாந்த், மக்களைத்தான் நம்பினார்” எனக் கூறினார். இதனையடுத்து, கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “தேர்தலுக்கு ஒரு வருடம் உள்ளது. இது மார்ச் மாதம் தான். எனவே, பொறுத்திருங்கள். அந்த காலம் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்றார்.

தொடர்ந்து, ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் ஏதேனும் மன வருத்தம் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “அதுபோல ஏதுமில்லை” எனத் தெரிவித்தார். எனவே, அதிமுக – தேமுதிக இடையேயான மனக்கசப்பு முடிவுக்கு வந்திருக்குமோ எனத் தெரிகிறது.

மேலும், வருகிற ஜூலை மாதத்துடன் தமிழ்நாட்டில் 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ளது. இதன்படி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்எல்ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்எல்ஏக்களை வைத்துள்ள அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

இந்த நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து அதிமுக உறுதி அளித்து உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

1 hour ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

2 hours ago

This website uses cookies.