நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் 3,4,5,வார்டுகளில் பாஜக அரசாங்க தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இன்று பிரதமர் மோடி 100 வது மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.
100-வது நிகழ்ச்சியை முன்னிட்டு பாஜக நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதன்பின் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னரும் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. மனதின் குரல் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். தமிழின் பெருமை குறித்தும் பலமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 வது அத்தியாத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 அத்தியாத்தை எட்டியுள்ளதை குறிக்கும் விதமாக பாஜக பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப்பட்டது. பிரதமர் மோடி இந்தியில் உரையாற்றினார்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.