திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் அருகே போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 3 மணியளவில் 3 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக பேருந்து நிலையம் அருகே விசாரணை கைதியுடன் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் பிடியிலிருந்து திடீரென அந்த விசாரணை கைதி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 போலீசாரும் சுதாரித்து கொண்டு கைதியை பின்னால் விரட்டி சென்றுள்ளனர்.
சுமார் 500 அடி தொலைவு வரை சாலையின் எதிர் திசையில் ஓடிய போது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த சரக்கு ஆட்டோ ஒன்றின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். அவரை விரட்டி வந்த 3 போலீசாரும் விசாரணை கைதியை மடக்கி பிடித்து அழைத்து சென்றனர்.
தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.