திருப்பூர் ; பல்லடம் பேருந்து நிலையம் அருகே போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா பேருந்து நிலையம். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 3 மணியளவில் 3 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக பேருந்து நிலையம் அருகே விசாரணை கைதியுடன் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் பிடியிலிருந்து திடீரென அந்த விசாரணை கைதி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 3 போலீசாரும் சுதாரித்து கொண்டு கைதியை பின்னால் விரட்டி சென்றுள்ளனர்.
சுமார் 500 அடி தொலைவு வரை சாலையின் எதிர் திசையில் ஓடிய போது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்த சரக்கு ஆட்டோ ஒன்றின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். அவரை விரட்டி வந்த 3 போலீசாரும் விசாரணை கைதியை மடக்கி பிடித்து அழைத்து சென்றனர்.
தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.