Categories: தமிழகம்

கேரள சிறையில் இருந்து தப்பி ரயில் மூலம் பயணம் செய்த கைதி : 2 மணி நேரத்தில் போலீசார் எடுத்த அதிரடி… திருப்பூரில் காத்திருந்த அதிர்ச்சி!!

திருப்பூர் : மனைவியை சரமாரியாக தாக்கியி கணவனை கைது செய்த நிலையில் ஜெயிலில் இருந்து ரயில் மூலம் தப்பி வந்தவனை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஷினாய் திருமணமான நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6ஆம் தேதி இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஷினாய் , அவரது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்தவர் பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநிலம், குழல்மண்ணம் போலீசார் ஷினாயை கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சிறையில் இருந்த இன்று மதியம் தப்பித்த ஷினாய் , பாலக்காட்டில் உள்ள ரயில் ரயில் நிலையத்தில் இருந்த போது, கேரளாவில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி தப்பித்துள்ளார்.

இதனை அறிந்த கேரள மாநிலத்தை சேர்ந்த குழல்மண்ணம் காவல்நிலைய போலீசார் ஷினாய் புகைப்படத்தை, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் கொடுத்தனர்.

இதனிடையே ரயிலானது திருப்பூர் ரயில் நிலையம் வந்த போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஷினாய் இருப்பதை அறிந்த திருப்பூர் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து இதுகுறித்து கேரளா மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார் ஷினாயை கைது செய்து கேரள மாநிலம் அழைத்து சென்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

18 minutes ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

42 minutes ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

2 hours ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

2 hours ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

2 hours ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

3 hours ago

This website uses cookies.