நெல்லையில் பதட்டம் ஏற்படுத்திய சீவலப்பேரி பூசாரி கொலை வழக்கு கைதி நீதிமன்றத்தில் வைத்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுடலைமாட சுவாமி கோயிலை நிர்வகிப்பதில் ஏற்பட்ட தகராறில் கோவில் பூசாரி சிதம்பரம் (எ) துரை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்தனர். தொடர்ந்து ஓரிரு மாதத்தில் பூசாரி சிதம்பரத்தின் உறவினர் மாயாண்டி என்பவரும் கொலை செய்யப்பட்டார்.
ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது சீவலப்பேரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் குறிப்பிட்ட இரண்டு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினையை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில் பூசாரி சிதம்பரம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இரண்டு பேரை விசாரணைக்காக நெல்லை மாவட்ட கூடுதல் மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, தங்கபாண்டி என்ற விசாரணை கைதி நீதிமன்றத்திலிருந்து பேனா மை பாட்டிலை உடைத்து, அதை கொண்டு தனது இடது கையில் கிழித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்கபாண்டியை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றத்துக்குள் வைத்து விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
பலமுறை ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தும் தனக்கு ஜாமின் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தங்கபாண்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் சமுதாய ரீதியாக தன்னை துன்புறுத்துவதாகவும், சிறையில் தன்னைக் காண வரும் உறவினர்களை போலீசார் மிரட்டுதாகவும் தங்கபாண்டி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த முறை இதே போல் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோதும் தங்கபாண்டி நீதிமன்றத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் முட்டி இதேபோன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே தங்கப்பாண்டியன் மனநிலை தெரிந்தும் போலீசார் இன்று அவருக்கு உரிய முறையில் பாதுகாப்பு கொடுக்காமல் அலட்சியமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.