Categories: தமிழகம்

கடனை திரும்ப கேட்டு குடும்பத்தை தகாத வார்த்தையில் பேசிய தனியார் வங்கி ஊழியர்கள் : மனமுடைந்து தற்கொலை செய்த 7ம் வகுப்பு மாணவன்!!

கன்னியாகுமரி : கடனை திரும்ப கேட்டு தகாத வார்த்தைகள் பேசி தன்னை தனியார் வங்கி ஊழியர்கள் தாயை மிரட்டியதால் மனமுடைந்து மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த அஞ்சாலி பகுதியை சேர்ந்தவர்கள் சசிக்குமார்- இந்திரா ராணி தம்பதியர். இதில் கணவர் சசிக்குமார் வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில் இந்திரா ராணி தனது இரு மகன்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி செவ்வாய் கிழமை அன்று தனது மூத்த மகன் ஷபரூன் சத்தம் போடுவதை கண்டு வீட்டிற்கு வெளியே தனியார் வங்கி ஊழியர்களிடம் பேசி கொண்டு நின்ற இந்திரா ராணி வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது 7-ம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன் ஷ்பபின் வீட்டிற்குள் டவலை கழுத்தில் கட்டி உத்திரத்தில் தூக்கில் தொங்கியபடி நின்றுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் தகவல் அறிந்த அங்கு வந்த குளச்சல் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து மாணவர் ஷ்பபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதற்கிடையில் தாய் இந்திரா ராணி நேற்று 23-ம் தேதி காவல் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் நடத்தி வரும் மகளிர் சுய உதவி குழுவிற்காக தக்கலையில் உள்ள தனியார் வங்கியில் (HDFC) ரூ 8-லட்சத்திற்கு கடன் பெற்றுள்ளதாகவும் இந்த மாத தவணை செலுத்தாத நிலையில் , கடந்த 22-ம் தேதி செவ்வாய் கிழமை வீட்டிற்கு வந்த தனியார் வங்கி ஊழியர்கள் தன்னிடம் தன் இரு மகன்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசி தவணை தொகையை உடனடியாக செலுத்த வர்ப்புறுத்தியதாகவும் இதைக்கண்ட தனது இளைய மகன் ஷ்பபின் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே எனது மகனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தார்.

இந்தநிலையில் இன்று பிரேத பரிசோதனைக்கு பின் மாணவன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் போலீசார் தாய் இந்திரா ராணியின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க தக்கலை(HDFC) தனியார் வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் விடுப்பில் சென்று விட்டதாகவும் சம்பவம் குறித்து தான் விளக்கமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

9 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

9 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

10 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

11 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

12 hours ago

This website uses cookies.