குடியாத்தம் அருகே தனியார் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்தில் அதிர்ஷ்டவசமாக கணவன், மனைவி உயிர்தப்பினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து வேலூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்பொழுது குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்ற போது, சென்னையில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த கார், எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், கார் முன்பக்கம் சேதமடைந்தது காரில் இருந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சசிரேகா இருவரும் காயத்துடன் உயிர்தப்பினர்.
இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்க, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
This website uses cookies.