பொள்ளாச்சியில் அருகே தனியார் பேருந்தும், சரக்கு வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் கோபாலபுரத்தில் இருந்து KMT எனும் தனியார் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பலரை ஏற்றிகொண்டு பொன்னாயூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
தனியார் பெட்ரோல் பங்க் அருகே வரும் பொழுது, பொள்ளாச்சியிலிருந்து வந்த சரக்கு வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்
சரக்கு வாகன ஓட்டி நடராஜ் மற்றும் பேருந்து பயணி கிட்டுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், விபத்து குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்து சரக்கு வாகனம் மோதி இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
This website uses cookies.