ராமநாதபுரம் : கமுதியில் போக்குவரத்து விதிகளை மீறி, ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு மோட்டார் வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறி, தொடர்ந்து ஆபத்தான முறையில், பள்ளி மாணவ, மாணவிகளை, அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்லும் நிலை தொடர்கதையாக உள்ளது.
இவற்றை கட்டுப்படுத்த போக்குவரத்து மோட்டார் வாகன அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்ல போதிய அளவு அரசு பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் ஆபத்தான பயணத்தை தொடர்ந்து நாள்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவற்றை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார் கண்டு கொள்ளாதால், மாணவர்கள் அரசு, தனியார் பேருந்துகளின் மேற்கூரைகளிலும், சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஏறிச்சென்று ஆபத்தான பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவ, மாணவிகளின் நலனை கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குழந்தை, கணவருடன் செட்டிலான இளம்பெண் சமூக வலைதளம் மூலம் இளைஞருடன் பழகி வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு…
'வாடிவாசல்' படத்திற்கான முக்கிய அப்டேட் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து…
தென்காசி அருகே பெண்ணாக மாற முயற்சித்து, சக திருநங்கைகளால் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். தென்காசி: தென்காசி…
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியல்வாதியாக…
குட் பேட் அக்லி படம் எதிர்பார்த்த வசூலைக் குவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்…
This website uses cookies.