வேலூர் அருகே செல்போன் பேசியபடி தனியார் பேருந்தை ஓட்டுனர் இயக்கியதால் பயணிகள் பீதியடைந்தனர்.
வேலூரில் இருந்து ஒடுக்கத்தூருக்கும், ஒடுக்கத்தூரிலிருந்து வேலூருக்கும் பல தனியார் பேருந்துகள் அணைக்கட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், (08.11.2023) மதியம் ஒடுக்கத்தூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பேருந்து ஓட்டுனர் நீண்ட தூரம் செல்போன் பேசியபடியே பேருந்தை இயக்கியுள்ளார்.
சாகசம் செய்வதை போல ஒரே கையால் ஸ்டேரிங்கையும், அதே கையால் ஹாரனையும் அடித்தும், சில சமயம் ஸ்டேரிங்கை விட்டுவிட்டு பேருந்தை ஓட்டியுள்ளார். இது அப்பேருந்தில் பயணிந்த பயணிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு அவர்களை அச்சத்தில் உறைய செய்துள்ளது.
இதுகுறித்து பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வழித்தடத்தில் அடிக்கடி நிகழ்வதால் தனியார் பேருந்து நிறுவனங்களும், அரசு போக்குவரத்து துறையும் இதனை கண்காணித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விதிமுறையை மீறும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.