தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளின் உயிரையும் பொருட்படுத்தாமல், எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநரின் அதிர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்து தொப்பூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்ப குதியில் சுமார் 6 கி.மீ தொலைவு வரை, தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தர்மபுரி- சேலம் சாலையில் உள்ள கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில் முதல் வளைவு, 2ம் வளைவு, கணவாய், இரட்டை பாலம், போலீஸ் கோட்ரஸ் ஆகிய பகுதிகளில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
இதனால் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி ஊழியர்கள், சாலை விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு வகையில் விழிப்புணர்வுகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்து, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஆனால், இந்த வழியாக செல்லும் தனி யார் பஸ்கள் அதிவேகமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில், இன்று தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. அப்போது, பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று, சாலை விதிகளை மீறி சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரும் போது விபத்துகள் நடைபெறும் இடத்தில் அதிவேகமாக எதிர்திசையில் சென்றுள்ளது.
அவ்வாறு அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்சில் இருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
எனவே தொடர் விபத்துக்கள் நடைபெறும் தொப்பூர் மலைப்பாதை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது எல்லாம், தனியார் பஸ்கள் முண்டியடித்துக் கொண்டு பயணிகளின் நலனை கருத்தில் கொள்ளாமல், ஆபத்தாக எதிர்திசையில் செல்லும் பஸ்கள் மீது மாவட்ட போக்குவரத்து துறை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.