கோவை மாவட்டம் காந்திபுரம்- ஆனைகட்டிக்கு செல்லும் தனியார் பேருந்தில் கூட்டம் அதிமாக இருந்ததால், பெண் பயணிகள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள கதவில் அமர்ந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேருந்து கணுவாய் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் போது பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.
ஆனைகட்டிக்கு செல்லும் வழி மலைப்பாதை என்பதால் பல்வேறு வளைவுகள் இருக்கின்ற சூழலில் இது போன்று பயணிப்பது மிகவும் ஆபத்தானது என்றும், ஆனைகட்டிக்கு இரண்டு தனியார் பேருந்துகளும் மிகக் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகளும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் இவ்வாறு பயணிக்கும் சூழல் ஏற்படுவதாகவும், அப்பகுதிக்கு கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
அதே சமயம் வருமானத்திற்காக அதிகமான மக்களை ஏற்றிச்செல்லும் தனியார் பேருந்துகள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் நிலையில், அப்பேருந்தின் ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் வலைதளவாசிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.