சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரிய சோறை பூமி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் ரிஷி பிரியன் ( 17). இவர் கோவை பீளமேடு அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
கல்லூரியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு மாணவர் ரிஷி பிரியன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படியுங்க: சென்னையை விட மதுரையில் தாறுமாறு வரி.. மதுரை கம்யூ., கட்சி துணை மேயர் திடீர் அதிருப்தி!!
இதைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எடப்பாடியில் உள்ள அவரது தந்தை மாறியப்பனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மாணவன் ரிஷி பிரியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் ரிஷி பிரியன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
This website uses cookies.