கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாணவ,மாணவிகள் பயிலும் அரசு துவக்கப்பள்ளியை தத்தெடுத்த தனியார் அறக்கட்டளை ரூபாய் 3 கோடி செலவில் பள்ளியை மேம்படுத்தும் பணிகளை துவக்கியது.
கோவையை சேர்ந்த மார்ட்டின் குரூப் ஆப் நிறுவனத்தினர் தங்களது அறக்கட்டளை வாயிலாக மருத்துவம், கல்வி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஒன்றிய துவக்க பள்ளியை தத்தெடுத்த மார்ட்டின் அறக்கட்டளையினர் பள்ளிக்கு தேவையான கழிப்பறை வசதிகள், நவீன கணிணி லேப் மற்றும் அறிவியல் லேப் என ரூபாய் மூன்று கோடி செலவில் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை துவக்கினர்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், அறக்கட்டளை நிர்வாகிகள் லீமா ரோஸ் மார்ட்டின், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
This website uses cookies.