தமிழகம்

கிண்டி மருத்துவமனை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. தாயார் மீது பரபரப்பு புகார்!

சென்னை கிண்டி மருத்துவமனை மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம், பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு மருத்துவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மருத்துவர் பாலாஜி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், தான் நலமுடன் உள்ளதாக அவரே வெளியிட்ட வீடியோ அதனை உறுதிப்படுத்தியது. அதேநேரம், மருத்துவரைத் தாக்கிய விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

இதனிடையே, கைதான இளைஞர் விக்னேஷின் உறவினர்கள், மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்பதால், அடுத்தடுத்து இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சென்று தனது தாய்க்கு சிகிச்சை அளித்ததாகவும், அதில் ஒரு மருத்துவர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கக்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா மற்றும் விக்னேஷின் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜேக்கின் மோசஸ் eன்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் மீது அவதூறு பரப்பி வருவதாக புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பற்றிய நெருப்பு.. தீயில் கருகிய 10 குழந்தைகள்.. உ.பியில் சோகம்!

இதன்படி, அந்தப் புகாரில், “சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை, அவருக்கு அங்கு வழங்கப்பட்ட மருந்தால் தான் நோயாளி உடல்நிலை மோசமடைந்தது என நான் கூறியதாக தவறான கருத்துகளை பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.

நுரையீரல் தொடர்பான பிரச்சனைக்கு 3 முறை என்னிடம் பிரேமா சிகிச்சை எடுத்து உள்ளார். எனது அறிவுறுத்தலின் பேரில், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்டார். என்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் லோகேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

4 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

6 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

7 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

8 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

8 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

9 hours ago

This website uses cookies.