தமிழகம்

தனியார் மருத்துவமனை செவிலியருக்கு கத்திக்குத்து : விடுதிக்குள் புகுந்து இளைஞர் வெறிச்செயல்!

கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் பிரியா என்ற டெண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணி புரிந்து செவிலியர் பிரியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சேர்ந்த சுஜித் என்ற இளைஞருக்கும் காதல் இருந்து வந்து உள்ளது.

இதையும் படியுங்க: நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!

சுஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் பிரியா அவருடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்ற சுஜித்தை அங்கு பணியில் உள்ள விடுதிக் காப்பாளர் தடுத்து உள்ளார்.

அவரை கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளே சென்ற சுஜித், பிரியாவின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்த முற்பட்டு உள்ளார். பிரியா தப்ப முயன்ற போது அவரது கைகளில் வெட்டுக் காயம் உண்டானது.

இதை அடுத்து அங்கு வந்த விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை காவலாளிகள் சுஜித்தை பிடித்து ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து விடுதிக் காப்பாளர் அளித்த புகாரில் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிரியாவும், சுஜித்தும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பிரியா திடீரென பேசுவதை நிறுத்தியதால் சுஜித் ஆத்திரம் அடைந்து இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் செவிலியரின் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை அவரது கணவர் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

10 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

This website uses cookies.