கோவையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை அளித்த உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் மகளிர் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார். இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என பலர் தங்கி உள்ளனர். இந்நிலையில், நேற்று விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவரை தனது காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது, மாணவிக்கு அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர், நேற்று இரவு விடுதிக்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இது குறித்து விடுதி உரிமையாளர் ராஜ்குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்பொழுது வாக்குவாதம் ஏற்படவே, ராஜ்குமாரை மாணவியின் பெற்றோர் தாக்கியுள்ளனர். பின்னர், அவரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நண்பரின் மனைவி குறித்து அவதூறு.. கறி வெட்டும் கத்தியால் பறிபோன உயிர்!
இதனையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல்துறையினர் ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.