வேலூர் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்தவர் முகமது சானேகா (வயது 35). வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் 10-ம் வகுப்பு மாணவியிடம் செல் போனில் புகைப்படம் அனுப் பும்படியும், வீடியோ கால் செய்யும்படியும் கட்டாயப்படுத்தி அவ்வாறு செய்யாவிட்டால் தேர்வில் சரியாக மதிப்பெண் வழங்க மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்
இதையும் படியுங்க: துணை நடிகர்களான இரட்டையர்கள் கைது… போதையில் போலீசாருக்கே மிரட்டல்!
அதனால் பயந்துபோன மாணவி தனது புகைப்படங்களை அனுப்பி வைத்து, வீடியோ காலிலும் பேசி உள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய ஆசிரியர் பள்ளியில் வைத்து மாணவிக்கு அடிக்கடிபாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் முகமது சானேகா மாணவியிடம் குளிக்கும்போது வீடியோ கால் செய்ய வேண்டும் என் றும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை தெரிவிக்கும்படி யும் கூறி இதனை செய்யாவிட்டால் தேர்வில் மதிப்பெண் வழங்க மாட்டேன் என்றும் மிரட்டி உள்ளார். அதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட முயன்றுள்ளார்.
இதனை கவனித்த தாயார் இதுபற்றி மாணவியிடம் கேட்டுள்ளார். அப்போது ஆசிரியரால் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து அழுதபடி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து நேற்று வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் தமிழரசி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து முகமது சானேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.