Categories: தமிழகம்

உக்கடம் மேம்பாலப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் : அவதியில் வாகன ஓட்டிகள் : மாற்றுப்பாதை ஏற்படுத்தாததால் பணிகளில் தொய்வு!!

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்க பில்லர் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கே இணைப்பு பகுதிக்கான வேலைகள் நடக்கிறது. பகல், இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் 3 கி.மீ தூரம் வரை காத்திருந்து ஆத்துப்பாலத்தை கடக்க வேண்டியிருக்கிறது.

உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வாடிக் கையாகி விட்டது.

வாகன நெரிசல் காரணமாக இந்த பகுதியில் மேம்பால பணி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் பாலங்கள், இரும்பு பொருட்கள், ஜல்லி, சிமெண்ட் கொட்ட இடம் இன்றி பணி நடத்துவோர் திணறுகின்றனர்.

மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இடவசதியின்றி பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். பணி நடத்தும் போது வாகனங்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களை மாற்றுப்பாதையில் விட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்ட போது, இரு பிரதான ரோட்டில் இருந்து அதிக வாகனங்கள் வந்து செல்கிறது. செல்வபுரம் பைபாஸ், புட்டுவிக்கி ரோட்டில் வாகனங்கள் சென்று வரலாம்.

ஆனால் இங்கே பெரும்பாலான வாகனங்கள் செல்லாமல் 3 கி.மீ தூரத்தை மிச்சமாக்க பல நிமிட நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நிலை இருக்கிறது.

கனரக வாகனங்கள் இலகுரக வாகனங்கள் பூட்டி வைக்கிற ரோட்டில் சென்று வரும் திட்டம் பாலம் கட்டும் பணி தொடங்கும் போது இருந்தது அப்போது போக்குவரத்து பிரச்சினை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது.

இப்போது நிலைமை கைமாறி போய்விட்டது. கடும் நெரிசல் காரணமாக பகல் நேரத்தில் பணி நடத்த முடியவில்லை. இரவு நேரத்திலும் வாகனங்கள் புரிந்து இருக்கிறது. எப்படி பாலத்தின் இறங்கு தளம் பணிகளை நடத்துவது என தெரியாமல் தவிக்கிறோம் வாகனங்களை மாற்றுப் பாதையில் விட்டால்தான் குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

9 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

9 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

11 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

11 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

12 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

12 hours ago

This website uses cookies.