கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் ரோட்டில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது.
பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தினார்.
‘முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்’ என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.
அவர்களுக்கு அசல், வட்டி எதுவும் தராமல் பாலச்சந்திரன் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே புகார்கள் தரப்பட்டிருந்தன.
இந்த நிலையிலே எஸ்.கே.எம்., டிரேடர்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பீளமேடு நேரு நகர் நான்காம் மேற்கு வீதியை சேர்ந்த கணேசன் (வயது 51) என்பவர் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
தான் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதற்கு அசல், வட்டி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல் துறையினர் பாலச்சந்திரன் உட்பட மூவர் மீது வழக்கு பதிந்தனர்.
நிதி நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரனை கைது செய்த போலிஸார் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.