கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்… இன்னும் 20 நாட்களில் : சென்னை மக்களுக்கு அமைச்சர் உறுதி!!!
திருவள்ளூர், மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் 100 எம் எல் டி ஆலையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு அமைச்சர் ஆர் காந்தி எம்பி ஜெயகுமார் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர் கோவிந்தராஜன்
கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வில் உடன் இருந்தனர்.
சென்னை புறநகர் பகுதியான மீஞ்சூர் செம்பரம்பாக்கம் புழல் சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீரை முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க அறிக்கை தயார் செய்து முதலமைச்சர் உடன் பேசி வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மீஞ்சூர் பொன்னேரி அனுப்பம்பட்டு சுற்று வட்டாரங்களில் உப்பு நீர் கலந்து வருவதை தடுக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
காட்டுப்பள்ளி 100 எம் எல் டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலையில் உபகரணங்கள் அனைத்தும் பழுதாகி விட்டன என்றும் 50 எம் எல் டி மட்டுமே குடிநீர் உற்பத்தி நடைபெறுவதாகவும் விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து பழுதுகள் சரி செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீர் கையிருப்பு உள்ளது என்றும் பூண்டி புழல் நீர் தேக்கங்களில்
13 டிஎம்சி கொள்ளளவில் தற்போது 9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது என்றும், 1000எம் எல் டி சென்னை குடிநீருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் 20 நாட்களில் 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலையிலிருந்து தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் பணிகள் துவங்க உள்ளது என அவர் தெரிவித்தார்..
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.