Categories: தமிழகம்

கோவையில் தெருநாயை கட்டையால் தாக்கி கொன்ற கொடூரம்: சிசிடிவி வீடியோவால் தாய் மற்றும் மகன் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவை அருகே தெரு நாயை அடித்து கொடூரமாக கொலை செய்தவர் மீதும் அவரது தாய் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை வடவள்ளியை அடுத்த வீரகேரளம் பகுதியில் உள்ள கே.கே.நகரில் அதிகளவிலான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்க கூடிய வாலிபர் ஒருவர், தன் வீட்டு முன்பு சுற்றி திரியும் தெருநாயை பிடித்து, வீட்டில் உள்ள கட்டையை எடுத்து, சரமாரியாக தாக்கினார். இதில் நாய் வலி தாங்க முடியமால் அலறி அடித்து கொண்டு ஓட முயற்சிக்கிறது. ஆனால் விடாமல் அந்த நாயை துரத்தி சென்று பிடித்து தலையில் அடித்தார். இதனால் சிறிது நேரத்தில் அந்த நாய் இறந்து விட்டது.

இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த நபர் நாயை தரதரவென இழுத்து சென்று சாலையோரம் வீசி விட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நாயை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நாயை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் மினி என்பவர் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணையில் நாயை தாக்கி அடித்து கொன்றது, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தொழிலாளியான பாலு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலு மற்றும் அவரது தாயார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…

3 hours ago

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

4 hours ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

5 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

5 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

5 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

6 hours ago

This website uses cookies.