பெரியகுளத்தில் வீட்டில் வைத்து விபச்சாரம் செய்த நான்கு பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முதலிக்கோட்டை தெரு பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த ஒரு மாத காலமாக குடியிருந்து வரும் பெண் ஒருவர் விபச்சாரம் நடத்துவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரிய குளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் அங்கு பெண்கள் உட்பட ஒரு ஆண் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கோம்பை, தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் பெண்களை வரவழைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் பெரியகுளத்தில் பல்வேறு வீடுகளில் இவர்கள் குடியிருந்து இது போன்று விபச்சாரத்தில் ஈடுபட்டு வீடை காலி செய்யச் சொல்லி வெளியே அனுப்பி வைத்ததாகவும் தற்போது முதலில் கோட்டை தெருப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒரு மாதமாக குடியிருந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விபச்சாத்தில் ஈடுபட்டவர்களிடம் இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெழியாக உள்ளதாக தெரிகிறது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.