கோவை : மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகி மற்றும் விடுதி உரிமையாளர் கைது.
நீலகிரி மாவட்டம் எம் பாலடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (வயது 38). இவர் தன் மனைவி இரண்டு மகனுடன் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
இவர் காய்கறிகளை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்து விட்டு களைப்பாக இருந்ததால் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான கல்லார் காட்டேஜில் தங்கி ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று ரூம் புக் செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்து அவர் பெயர் விலாசம் கேட்டு தெரிந்து ராஜூ சுந்தர் என்பவர் புக்கிங் செய்து கொடுத்ததாகவும். அப்போது அவர் எங்க காட்டேஜில் ஜாலியாக இருக்க அழகான பெண்கள் என்றும் உள்ளே அழைத்து சென்றதாகவும் காட்டேஜில் மற்றொரு அறையில் இருந்த ராஜ்குமார் என்பவரிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.
அவர் ரூபாய் 2000 கொடுத்தால் விதவிதமான பெண்களை வெளியில் இருந்து வரவழைத்து தருவதாக கூறியுள்ளார். இதைஅடுத்து சந்தோஷ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கருப்புசாமி விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த பெண் மற்றும் லாட்ஜின் உரிமையாளர் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த பெரிய பாண்டி மகன் ராஜ்குமார் (வயது 38), மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் ராஜ் சுந்தர் (வயது 31) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர். நீதிபதி ராஜ்குமார் மற்றும் ராஜ் சுந்தரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதை அடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணை கோவை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.