எந்த பொண்ணு வேணும்? ரகம் ரகமா இருக்கு.. களைகட்டிய விபச்சாரம்.. புரோக்கருடன் சிக்கிய 4 பேர்!
திருப்பூர் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரம் ஆகும். இங்கு தமிழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வட மாநிலத்தவர்களை சார்ந்தவர்களும் என சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தில் இருந்து பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்காக வருபவர்களை குறிவைத்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபம் அருகில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்த பொழுது அந்த வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த பட்டதாக தெரியவந்தது.
தொடர்ந்து வீட்டில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாரோகான் என்பவரும் வாடிக்கையாளர்களாக சென்ற இளங்கோ,உதயகுமார்,முருகேசன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இரண்டு பெண்களையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பின்னலாடை நிறுவனத்திற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் வந்தது தெரிய வந்தது.
மேலும் இரு பெண்களும் கூறுகையில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வந்ததாகவும் சாரூக்ஹான் என்பவர் இதனை பயன்படுத்திக் கொண்டு தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறினர்.
தொடர்ந்து விபச்சார புரோக்கர் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் இருவரையும் காவல்துறையினர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.