Categories: தமிழகம்

தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்!!

கோவை : குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியரசு தின விழாவான இன்று டெல்லியில் நடைபெறும் மாநில ஊர்திகள் அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்திகளுக்கு சில காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குடியரசு தினமாக இன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கோவையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் கோவை மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு விடுதலை வீரர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பிரதமரை கண்டிப்பதாகவும் டெல்லியில் மறுக்கப்பட்ட ஊர்தியை தமிழகத்தில் அணிவகுப்பு நடத்திய முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம் உட்பட பல அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

40 minutes ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

58 minutes ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

2 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

2 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

2 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.