கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- சென்னை புறவழிச் சாலையில் திண்டிவனம் நகர பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளனர்.
மேலும் திண்டிவனத்தில் பரபரப்பான சூழல் நிலவுவதால் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் குவிந்துள்ளால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் ஆங்காங்கே பாமகவினர் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.