Categories: தமிழகம்

இந்தக் காடு எங்க காடு : திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிப்புக்கு எதிர்ப்பு.. மறியலால் பரபரப்பு!!

ஈரோடு : திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்து தடையை நீக்கக்கோரி புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் சாம்ராஜ்நகர் மாவட்ட விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறும் வழக்கம்.

குறிப்பாக இரவு நேரங்களில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு செல்வது வழக்கம்.

1455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அரியவகை மான்கள், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

Hasanur Tourist Places | Irfan ClicksHasanur Tourist Places | Irfan Clicks

குறிப்பாக புலிகள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிலை இங்கு நிலவுவதால் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இந்த புலிகள் காப்பகத்தின் வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் வழியாக திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையைக் கடக்கும் பொழுது அவ்வப்போது நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் எதிர்பாராதவிதமாக அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

இதன் காரணமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும் இரவு நேர போக்குவரத்து தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்த வேண்டுமென கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கின் தொடர்பாக மக்களின் கருத்துக்களைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் 2019ஆம் ஆண்டு தொடுத்த வழக்கின் படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை இன்று முதல் அமல்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாகன உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் தாளவாடியில் உள்ள மொத்தமாக காய்கறி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் கூறுகையில் வனவிலங்கு பாதுகாப்பு என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த பல விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து பார்க்க வேண்டும் எனவும் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர போக்குவரத்து தடை செய்ய கூடாது என அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள், விவசாயிகள், மொத்த காய்கறி விற்பனையாளர்கள் என அனைவரும் இன்று ஒன்றுகூடி பண்ணாரி சோதனை சாவடியில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாளவாடி மலை கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

9 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

10 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

11 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

12 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

12 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

13 hours ago