கோவை: மத்திய மாநில அரசுகளை கண்டித்து பிச்சை எடுத்தும் ஒப்பாரி வைத்தும் மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ஆகியவற்றை குறைக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒப்பாரி வைத்தும், பிச்சை எடுத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எரிவாய் விலையை குறைக்க கோரியும், சொத்துவரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது தட்டுக்களை வைத்து பெட்ரோல், டீசல் வாங்க பணமில்லை பிச்சையிடுங்கள் எனக்கூறி யாசகம் கேட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஆட்டோ ஒன்றின் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…
இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
This website uses cookies.