கோவை: மத்திய மாநில அரசுகளை கண்டித்து பிச்சை எடுத்தும் ஒப்பாரி வைத்தும் மக்கள் நீதி மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ஆகியவற்றை குறைக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒப்பாரி வைத்தும், பிச்சை எடுத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநில துணை தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எரிவாய் விலையை குறைக்க கோரியும், சொத்துவரி உயர்வை திரும்ப பெறக்கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது தட்டுக்களை வைத்து பெட்ரோல், டீசல் வாங்க பணமில்லை பிச்சையிடுங்கள் எனக்கூறி யாசகம் கேட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து ஆட்டோ ஒன்றின் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.