திண்டுக்கல் ; கைதுக்கு பயந்து நெஞ்சுவலி என செந்தில்பாலாஜி நாடகமாடுவதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு செயல்பட்டு வரும் தண்டபாணி நிலையத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவர் கூறியதாவது:- அரசு போக்குவரத்து துறையில் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்காத வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படியே அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மதுக்கடை பார்களில் போலியான முகவரியை கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளார். இது குறித்து பலமுறை எச்சரித்தும் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது தவறு. கைதுக்கு பயந்து நெஞ்சுவலி எனக்கூறி செந்தில்பாலாஜி நாடகமாடுகிறார் என கூறினார்.
முறைகேடாக சம்பாதித்த பலநூறு கோடி ரூபாயை பல்வேறு நாடுகளில் ஹவாலா மூலமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கிய உள்ளதாக தகவல் வருகிறது.எனவே அமலாக்கத்துறையினரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை அரசியல் ஆக்குகின்றனர். கைதை சட்டபூர்வமாக சந்திக்க வேண்டும்.
மேலும் கடந்த 2017ல் நீட் தேர்வு அறிமுகமான போது எதிர்த்து திமுக போராடியது. ஆனால், தற்போது நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றதன் மூலம் அதன் நன்மை குறித்து அனைவரும் புரிந்து கொண்டனர். சினிமாவின் மோகம் குறைய துவங்கியதால் மதுவை இலக்காக வைத்து தமிழக மக்களை அடிமையாக்கி வைக்க திமுக முயற்சி செய்கிறது, எனக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.