தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் உள்ள தீண்டாமை சுவரை இடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டியது.
திருவள்ளூர் மாவட்டம் தோக்கமூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மக்களிடம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், குடியிருப்புகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவர் அகற்றபடவேண்டும், அரசு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, வேலி அமைக்க கூடாது என கோட்டாட்சியர் காயத்ரி தெரிவித்ததை தொடர்ந்து, இரு தரப்பும் ஏற்று பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டியது.
விரைவில் தீண்டாமை சுவரை இடிக்கும் பணிகள் வருவாய்த்துறை மூலம் நடைபெறும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தீண்டாமை சுவர் மற்றும் வேலி தற்காலிகமாக அமைக்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி பட்டியலின மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது பிரச்சினை கோட்டாட்சியரின் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.