தூத்துக்குடியில் நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்பட பாணியில் முத்தையாபுரம் காவல்துறை செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலை பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமாக காணப்பட்டு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: திடீரென சரிந்த கான்கிரீட் வீடு.. வைரலான வீடியோ.. கோவை மாநகராட்சி கூறுவதென்ன?
இந்த சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் சார்பில் காவல்துறையினர் விபத்துகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் கற்கள் மற்றும் மணல் சிமெண்ட் கலவை ஆகியவற்றை போட்டு சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் இந்த சேவையை பார்த்து அந்தப் பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்
நடிகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் காவல் துறை அதிகாரியாக வரும் விஜய் ஆண்டனி பொதுமக்களுக்கான சேவைகளில் ஈடுபடுவார்.
அதே போன்று தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் துறையினர் இந்த சேவையில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.