Categories: தமிழகம்

போதையில் சக மாணவர்களை துடைப்பக்கட்டையால் தாக்கிய அரசுப் பள்ளி மாணவன் : பள்ளிக்குள் மது, கஞ்சா சப்ளையா? விசாரணை!

விழுப்புரம் : திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் துடப்பக்கட்டை எடுத்து அடிக்கும் மாணவர் வீடியோ சமூக வலைதள வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சில மாதங்களாக பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வகுப்பறையில் அடாவடித்தனத்தை ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐந்து மாணவர்கள் ஒன்றாக சேர்த்து ஒரு ஆசிரியரை கேலி செய்வதும், மேலும் ஒரு மாணவன் கஞ்சா போதையில் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தற்போது பேசுபொருள் ஆகி வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருக்கும் மாணவர்களை துடப்பத்தால் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் பள்ளி வகுப்பறையில் உள்ள இருக்கக்கூடிய மின்விசிறி மற்றும் சுவிட்ச்போட் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர் ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவம் இப்பள்ளியில் அரங்கேறி வருவதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளிக் மாணவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவர்கள் நான்கு பேர் 5 பேராக ஒன்றிணைத்து காலையில் வருகைப்பதிவு எடுத்தவுடன் வெளியே சென்று பள்ளியின் பின்பக்க மதில் சுவர் எகிறி குதித்து முட்புதருக்குள் வீடு போல தயாரித்து அதில் மது அருந்துவதும் கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.

இது தொடர்பாக பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது :- இப்பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் குறிப்பாக எட்டாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரியாக பள்ளிக்கு வருவது கிடையாது, மேலும் நூற்றுக்கு 50 சதவீத மாணவர்கள் போதை மற்றும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி அடாவடித்தனத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வகுப்பறைக்குள் கஞ்சா புகைப்பது மது அருந்துவது மற்றும் செல்போனை வைத்து அட்டகாசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஆசிரியராக நான் கண்டித்தால் என்னை அடியாட்களை வைத்து மிரட்டுகின்றனர். மேலும் பள்ளிக்கு அழைத்து வந்து இதுபோன்ற மிரட்டல்களை விடுவதால் எங்களால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என ஆசிரியர் தரப்பில் கூறப்படுகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

2 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

3 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

4 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

4 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

5 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

5 hours ago

This website uses cookies.