Categories: தமிழகம்

கொளுத்தும் வெயிலில் பழுதான கார்…பொதுமக்களை தள்ள வைத்த அரசு அதிகாரிக்கு சிக்கல்: சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

ஸ்ரீபெரும்புதூரில் கலெக்டருடன் ஆய்வு பணிகளை மேற்கொண்ட பொறியாளரின் கார் பழுதானதால் காரில் அமர்ந்துக்கொண்டே கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை வைத்து காரை தள்ள வைத்த அதிகாரியால் சர்ச்சை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அரசு பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல்,போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தத்தனூர், மேட்டுப்பாளையம், பால்நெல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கலெக்டர் உடன் ஆய்வு பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் சரவணன் பயணித்து வந்த கார் சாலை நடுவே பழுதாகி பால்நெல்லூர் பகுதியில் நின்றது.

பின்னர் அங்கிருந்த பொதுமக்களை அதிகாரி மற்றும் டிரைவர் ஆகியோர் அழைத்து காரை தள்ளும்படி கூறியுள்ளார். அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப பொதுமக்கள் காரை தள்ளி விட்டு இயங்க வைத்தனர்.

ஆனால் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை காரை தள்ள வைத்தது மட்டும் இல்லாமல் செயற்பொறியாளர் காரில் அமர்ந்து கொண்டிருந்தது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.

பொது மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி மனிதாபிமானம் இன்றி காரில் அமர்ந்தவாறு பொதுமக்களை தள்ளிவைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு அதிகாரி இப்படி நடந்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த அரசு அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

31 minutes ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

44 minutes ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

2 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

2 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

3 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

3 hours ago

This website uses cookies.