Categories: தமிழகம்

“மாநகராட்சி வேண்டாம் என்று ஒன்று திரண்ட மக்கள்-பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!”

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக தான் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட ஆட்சியர் வேண்டா மாநகராட்சி குழுவுக்கு எச்சரிக்கை!

தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதோடு 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இன்னும் 20 தினங்களுக்குள் புதுக்கோட்டை மாநகராட்சி செயல்பட தொடங்கும் என்று நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாநகராட்சியோடு தங்களது ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், வரி உயரும் அபாயம் உள்ளது என்று கூறி பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் வேண்டாம் மாநகராட்சி என்ற 2 குழுவை அமைத்து அதில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இன்று காலை 500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்தனர்.இதனை தொடர்ந்து இரண்டாம் மாநகராட்சி குழு மற்றும் 11 ஊராட்சி தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களது ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வைத்தனர்.அதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சியர் உங்களுடைய கருத்துக்களை ஏற்கனவே அரசுக்கு தெரியபடுத்தி விட்டோம். மீண்டும் இன்று உங்களுடைய கோரிக்கைகளை அரசிற்கு நாங்கள் தெரிவிக்கிறோம். மாநகராட்சியோடு ஊராட்சி இணைந்தால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும் என்ற கருத்து தவறானது.

நகராட்சிக்கு என்று தனி வேலை திட்டம் உள்ளது.அதில் பயனாளிகளுக்கு பணி கொடுக்கப்படும். மாநகராட்சியோடு இணைத்தால் வேலை வாய்ப்புகள் வளரும் சூழ்நிலை ஏற்படும். எனவேதான் மாநகராட்சியோடு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. இருப்பினும் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை அரசுக்கு நாங்கள் எடுத்துரைக்கிறோம் என்று கூறியதோடு அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.அரசியல் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கினால் அது கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக தான் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மெர்சி ரம்யா அவர்களிடம் உறுதி கூறினார்.
இதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து தாசில்தார் தலைமையில் அரசு அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Sangavi D

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

3 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

3 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

4 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

4 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

5 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

5 hours ago

This website uses cookies.