தமிழகம்

வினோத பறவைகளால் ரூ.40,000 வரை நஷ்டம்.. குமுறும் புதுக்கோட்டை விவசாயிகள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

புதுக்கோட்டை, தாணிக்காடு கிராமத்தில் வரும் வினோத பறவைகளால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மதகம் ஊராட்சியில் உள்ளது தாணிக்காடு என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 180 ஏக்கருக்கும் மேலான இடத்தில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்தப் பகுதியில் உள்ள நெல் விவசாயமானது, பருவ மழையை நம்பியே பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு சரியாக நெற்கதிர்கள் விளையும் நேரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக வினோத பறவைகள் ஒன்று வருவதாகவும், அவ்வாறு வருகை தரும் பறவைகள் வயல்களில் நெற்கதிர்கள் துவங்கும் நேரத்தில், அதன் அடிப்பகுதிக்குச் சென்று வேருடன் பிடுங்குவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாது, அதில் வரும் குருத்துகளை சாப்பிட்டு விட்டு, அந்த கதிர்களைக் கொண்டு கூண்டு அமைப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்படும் கூட்டில் தங்கும் பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்கள் இனத்தை விருத்தி செய்து வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை பைல்ஸ் 1.. DMK Files 3-க்கு பதில்? திருச்சி சூர்யா பரபரப்பு பதிவு!

மேலும், இந்த நிகழ்வு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதால், ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 40 மூட்டைகள் வரை நெற்பயிர்கள் விளைந்து வந்த நிலையில், இந்த அரிய வகை பறவையின் தாக்குதலால், ஏக்கருக்கு 5 மூட்டை அளவு தான் நெல் கிடைப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாது, இந்த அரிய வகை பறவை இனத்தை அடையாளம் கண்டு, அதனைத் தடுத்து நிறுத்த வனத்துறை மற்றும் வேளாண்மைத் துறையினருக்கு புகார் அளித்ததாகவும், ஆனால் புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தைக் காக்க அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க முன்வரவில்லை என்றால், அப்பகுதியில் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

11 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

12 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

12 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

13 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

13 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

13 hours ago

This website uses cookies.