புதுக்கோட்டையில் திருமண விழாவில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நடந்த நாட்டு மாடு கண்காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிவகங்கை மாவட்டம் பொன்னடபட்டியை சேர்ந்த பொறியாளர் சரவணன் – சரண்யா தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரியம் மிக்க நாட்டு மாடுகள் இடம்பெற்ற கால்நடை கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் நாட்டுமாடு வகைகளான புளிகுளம் காளை, காங்கேயம் காளை, குரால், செவலை என ஜல்லிகட்டு காளைகளும், ரேக்ளா ரேஸ் காளை, சண்டை கிடாய், வண்டி மாட்டு வகைகள் இடம்பெற்றது. திருமண விழாவிற்கு வந்தவர்களை கவர்ந்தது.
திருமண விழாவிற்கு வந்தவர்களை வரவேற்க வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் மாப்பிள்ளை பெண் புகைப்படம் இடம்பெறாது, தங்களின் வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளை புகைப்பட மட்டும் இடம்பெறும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தது காண்பவரை வெகுவாக கவர்ந்தது.
மேலும், திருமணத்திற்கு வந்தவர்கள் காளைகளுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
This website uses cookies.